ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல தேரர் மற்றும் அமரபுர மகா நிகாயவின் பதில் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கங்துனே அஸ்ஸஜீ தேரர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் தங்கியிருக்கும் மீரிகம, மினிஒழுவ வித்யாவாச பிரிவெனாவுக்கு நேற்றும் (04) அமரபுர மகா நிகாயவின் பதில் மகாநாயக்க தேரர் வதியும் கேகாலை, கன்துனே உக்கல விஹாரைக்கு இன்று (05) முற்பகலும் சென்ற ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீரவினால் அறிக்கையின் பிரதிகள் கையளிக்கப்பட்டன.