Presidential Secretariat of Sri Lanka

‘சந்தஹிரு சேய’இல் பௌத்த பிக்குமாருக்கு அன்னதானம்…

மூன்று நிக்காயாக்களின் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நாடு பூராகவும் இருந்து வருகை தந்த மஹாசங்கத்தினருக்கு, “சந்தஹிரு சேய” தாது கோபுரத்துக்கு அருகில், இன்று (19) நண்பகல் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் மற்றும் அனைவருக்கும் நன்மைகள் சென்றடைவதற்கும் அனைத்து நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்களிப்புடன் இந்தப் புண்ணிய நிகழ்வு இடம்பெற்றது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular