Presidential Secretariat of Sri Lanka

“THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி ஜனாதிபதியிடம் கையளிப்பு…

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் ஷாந்த கோட்டேகொட அவர்களால் எழுதப்பட்ட “THE CONFLICT THAT ELUDED PEACE” நூலின் முதல் பிரதி, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஷாந்த கோட்டேகொட அவர்களின் 36 வருடகால இராணுவச் சேவையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இராணுவத்தின் காலாட்படைப் பிரிவின் மேஜர் தரநிலை முதல் இராணுவத் தளபதியாகப் பதவிநிலை வகித்து ஓய்வுபெற்றது வரை போர்க்களத்தில் கிடைத்த வெற்றிகள் மற்றும் பின்னடைவுகளின் ஒப்பீட்டு ஆராய்வை இதன் மூலம் முன்வைப்பதாக கோட்டேகொட அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

(English) Recent News

Most popular