Follow Us:

Tuesday, Aug 26
பிப்ரவரி 24, 2025

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமனம்

அரசாங்கத்தின் தொடர்பாடல் உத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பெரேராவிடம் வழங்கினார்.

ஏராளமான கல்வி நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள பிரசன்ன பெரேரா, பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் கற்கையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் களனி பல்கலைக்கழகத்தில் வெகுசனத் தொடர்பாடல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Top