” வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசியக் கொள்கையின்படி, நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தேசிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி அலுவலகம் செயல்படுத்துகிறது.
முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் கீழ்,
பொருளாதார விரிவாக்கம், பொதுமக்கள் பங்கேற்பு, பராமரிப்பு மற்றும் மனப்பான்மை மேம்பாடு மூலம் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த,
கொள்கை உருவாக்கம்
வேலைத்திட்டங்களை அடையாளம் காணல்
மூலோபாய திட்டமிடல்
ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், வேலைத்திட்ட முகாமைத்துவம், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு
இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கள் ஏற்கனவே அரச சேவையில் உள்ள சமூக விஞ்ஞான (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், பொருளியல், அபிவிருத்திக் கல்வி ) பட்டம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தராக இருந்தால்,
உங்களின் அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மை செயல்திறன், பயனுள்ள வகையில் இந்தத் தேசியப் பணிக்கு வழங்கத் தயாராக இருப்பின், ஜனாதிபதி அலுவலகம் முன்னெடுத்துச் செல்லும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதில் எம்முடன் இணைய உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அதற்காக உங்கள் சுயவிபரக்கோவையுடனான விண்ணப்பத்தை 2025.06.14 ஆம் திகதிக்கு முன்னர் dcd@presidentsoffice.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பதாரர்களிடையே உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியானவர்கள் நேர்முகப்பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.