மூன்று புதிய செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (19) நியமிக்கப்பட்டனர்.
கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு ஓசத சேனாநாயக்க அவர்கள் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.