களனி, பொல்லேகல மானெல்வத்த விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய போதாகம சந்திம தேரர், 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொவிட் ஒழிப்பு மருத்துவ, சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.
இன்று (25) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், தேரர் அவர்கள் இந்த உபகரணங்களைக் கையளித்தார்.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட அச்சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.