Presidential Secretariat of Sri Lanka

குருணாகல் ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) பிற்பகல் நடைபெற்றது.

குருணாகல் கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், ஆயரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர், கத்தோலிக்க சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பதில் ஆயர் வண.பிதா பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் குருநாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பொருளாளர் வண.பிதா சாகர பிரசாந்த ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார்.

(English) Recent News

Most popular