Presidential Secretariat of Sri Lanka

முன்னாள் ஆளுநர் மாஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை செலுத்தினார்

ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், ஜனாதிபதி சட்டத்தரணி மாஷல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) இறுதி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றையும் பதிவுசெய்தார்.

மாஷல் பெரேரா அவர்களின் மனைவியான திருமதி தயாபந்து, மகன் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி டிலான் பெரேரா மற்றும் மகள் கிசோலி ஆகியோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

(English) Recent News

Most popular