சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி புதிய அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவையடுத்து இந்த அமைச்சுப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.