புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கையின் 24வது கடற்படை தளபதியாக நேற்று நியமிக்கப்பட்டார்.
கடற்படை தளபதியாக பதவியேற்றதன் பின்னர், புதிய கடற்படை தளபதி பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி அவர்களை சந்தித்ததுடன், ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் கையளித்தார்.