Presidential Secretariat of Sri Lanka

சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்…

அம்பாறை – புத்தங்கல ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு 07, அகில இலங்கை பௌத்த மஹா சம்மேளன மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் தேரரின் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

பிரபல தம்ம போதகரான சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் அவர்கள், தனது 78ஆவது வயதில் நேற்று (28) காலை காலமானார்.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவிநிலை வகித்த அவர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார். ஆனந்த வீரசேகர என்ற இயற் பெயரைக் கொண்ட சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரராவார்.

2007 மே மாதத்தில் புத்தங்கல ஆனந்த என்ற பெயரில் துறவறத்தை ஏற்ற தேரர் அவர்கள், பல தம்ம புத்தகங்களை எழுதியுள்ளதோடு பல மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

(English) Recent News