ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (11) விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி அவர்களை தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.
சமயக் கிரியைகளை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அங்கு வருகைதந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி. திஸாநாயக்க, லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, ஆனந்த அளுத்கமகே மற்றும் அநுராத ஜயரத்ன ஆகியோரும் இங்கு வருகை தந்திருந்தனர்.