உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இன்று (15) பிற்பகல் 6.00 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர். உமா ஓய திட்டத்தின் சுமார் 95வீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள வேலைகளை இவ்வருட டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் ஊடாக 120 மெகா வோட் நீர் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.
இன்று வருகைதந்தவர்கள் PCR பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்கு பின்னர் இரண்டாவது முறையாகவும் PCR பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டதன் பின்னர் திட்டப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.